Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 2, Verse 49

தூ3ரேண ஹ்யவரம் க1ர்ம பு3த்3தி4யோகா3த்3த4னந்ஜய |

பு3த்3தௌ4 ஶரணமன்விச்12 க்1ருப1ணா: ப2லஹேத1வ: ||49||

தூரேண—--(நிராகரித்து); தூரத்திலிருந்து; ஹி—--நிச்சியமாக அவரம்—--தாழ்வானது; கர்ம—-வெகுமதி தேடும் செயல்கள்; புத்தி-யோகாத்—--தெய்வீக அறிவில் நிறுவப்பட்ட புத்தியுடன்; தனந்ஜய—--அர்ஜுனா; புத்தௌ—-- தெய்வீக அறிவு மற்றும் நுண்ணறிவு; ஶரணம்—--அடைக்கலம்; அன்விச்ச—--தேடு; க்ருபணாஹா—--கஞ்சத்தனம் உடையவர்கள்; ஃ பல-ஹேதவஹ----தங்கள் செயல்களின். பலனைத் தேடுபவர்கள்

Translation

BG 2.49: தெய்வீக அறிவு மற்றும் நுண்ணறிவில் அடைக்கலம் தேடு. ஓ அர்ஜுனா, தெய்வீக அறிவில் நிறுவப்பட்ட புத்திசாலித்தனத்துடன் செய்யப்படும் செயல்களை விட நிச்சயமாக தாழ்ந்த வெகுமதி தேடும் செயல்களை நிராகரிக்கவும். கஞ்சத்தனம் உடையவர்கள் தங்கள் படைப்புகளின் பலனை அனுபவிக்க முயல்பவர்கள்.

Commentary

வேலை செய்வதற்கு இரண்டு அம்சங்கள் உள்ளன: 1) நாம் செய்யும் வெளிப்புற செயல்பாடு மற்றும் 2) அதைப் பற்றிய நமது உள் அணுகுமுறை. உதாரணமாக, பிருந்தாவனத்தின் புண்ணிய பூமியில் கோயில் கட்டப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். தொழிலாளர்கள் ஒரு புனிதமான செயலில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் அவர்களின் அணுகுமுறை சாதாரணமானது. பெரும் ஊதியத்தைப் பற்றி கவலைப்படும் அவர்கள் மற்றொரு ஒப்பந்தகாரர் அதிக ஊதியம் வழங்கினால் வேலையை மாற்ற தயங்கமாட்டார்கள். அங்கே பிருந்தாவனத்தில் வசிக்கும் ஒரு துறவியும் புகழ்பெற்ற கோயில் கட்டப்படுவதற்கு கடவுளுக்கு சேவை செய்யும் வகையில் தன்னார்வ பணியில் ஈடுபடுகிறார். துறவியும் தொழிலாளர்களும் செய்யும் வெளிப்புற வேலை ஒன்றுதான்; ஆனால், அவர்களின் மனப்பான்மை மிகவும் வேறுபட்டவை.

இங்கே ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தனது உள் உந்துதலில் பணியை நோக்கி முன்னேறுமாறு அறிவுறுத்துகிறார். சுய மகிழ்ச்சியின் உந்துதலுடன் வேலை செய்பவர்கள் கஞ்சர்கள் என்று அறிவிக்கிறார். செயல்களின் விளைவுகளிலிருந்து விலகி, உயர்ந்த காரியத்தில் தங்கள் வேலையை அர்ப்பணிப்பவர்கள் உயர்ந்தவர்கள். மேலும் செயல்களின் பலன்களை கடவுளுக்கு அர்ப்பணிப்பவர்கள் உண்மையிலேயே அறிவில் நிலைத்திருக்கின்றனர்.

க்1ருப1ண (கஞ்சன்) என்ற சொல் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீமத் பாகவதம் ஒரு கஞ்சனை விவரிக்கிறது:

ந வேத3 கி1ருப1ணஹ ஶ்ரேய ஆத்1மனோ கு3ண-வஸ்து1-த்3ருக்1

1ஸ்ய தா1ன் இச்12தோ1 யச்1சே2த் யதி3 ஸோ ’பி11தா2-வித2ஹ (6.9.49)

கஞ்சர்கள் என்பவர்கள், இறுதி யதார்த்தமானது ஜட சக்தியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் புலன்களை மட்டுமே கொண்டுள்ளது என்று நினைப்பவர்கள்.' மீண்டும், ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது: ‘கி1ருபணோ யோ ஜிதே1ந்தி3ரிய: (11.19.44). ‘ஒரு கஞ்சன் (கிருபணன்) புலன்களின் மீது கட்டுப்பாடு இல்லாதவன்.’

ஒரு தனிமனிதர் உயர்நிலை நனவுக்கு பரிணமிக்கும் போது, ​​ஒருவன் இயற்கையாகவே வேலையின் பலனை அனுபவிக்கும் ஆசையை விட்டுவிட்டு சேவையின் திசையில் நகர்கிறார். மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷனில் தனது பதவியைத் துறந்த பில் கேட்ஸ், இப்போது சமூக சேவையில் தனது ஆற்றலை அர்ப்பணிக்கிறார். இதேபோல், அமெரிக்காவின் ஜனாதிபதியாக அதிகாரம் மற்றும் பதவியை நிரப்பிய பிறகு, பில் கிளிண்டன் இப்போது மனிதகுலத்திற்கு சேவையின் பெருமைகளைப் பிரசங்கிக்கிறார், மேலும் கிவிங் என்ற தலைப்பில்: எப்படி நாம் ஒவ்வொருவரும் உலகை மாற்ற முடியும் என்ற ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். சேவையில் அவர்களின் ஈடுபாடு பாராட்டுக்குரியது, ஆனால் அது இன்னும் முழுமையற்றது. எல்லாப் பலன்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்து, இறைவனின் திருப்திக்காக நம் பணிகளைச் செய்யக் கற்றுக் கொள்ளும் பொழுது அந்த சேவை மனப்பான்மை பூரணமாகிறது. ஒரு தனிமனிதர் உயர்நிலை நனவுக்கு பரிணமிக்கும் போது, ​​ஒருவன் இயற்கையாகவே வேலையின் பலனை அனுபவிக்கும் ஆசையை விட்டுவிட்டு சேவையின் திசையில் நகர்கிறார்..

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
2. ஸாங்கிய யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!